ஈரான் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காமேனி அதிரடி உத்தரவு web
உலகம்

ஈரான் போராட்டம்| துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை.. காமேனி அதிரடி உத்தரவு!

ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ந்டத்த காமேனி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Rishan Vengai

ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருளாதாரச் சரிவு மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது ஈரான் ஆட்சியையே உலுக்கி வருகிறது.

ஈரான் போராட்டம்

போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இதுவரை இரண்டாயிரத்து 571 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறார்.