உலகம்

"காபூல் விமானநிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு" - ஜோ பைடன்

jagadeesh

காபூல் விமானநிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

காபூல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், தற்போது அங்கு மிகவும் அபாயகரமான சூழலே நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காபூலில் உள்ள அமெரிக்க கமாண்டர்கள் தனக்கு தகவல் தெரிவித்துள்ளதாக ஜோ பைடன் கூறியிருக்கிறார்.