உலகம்

கொரோனா தடுப்பூசியை அடுத்தவாரம் செலுத்திக்கொள்ளும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்!

EllusamyKarthik

அமெரிக்க நாட்டின் 46வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனும், துணை அதிபராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் அடுத்து வரும் நாட்களில் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளது. அண்மையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Pfizer உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது. 

இந்நிலையில் வரும் திங்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் மற்றும் அவரது துணைவியார் ஜில் பைடனுக்கும் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த உள்ளதாக தெரிகிறது. பொது மக்களிடையே இந்த மருந்து குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், விழிப்புணர்வு கொடுக்கவும் அவர் இதை செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதே போல துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக்லசு எம்கோஃப்புக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அடுத்து வரும் வாரங்களில் எடுத்துக் கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை எப்போது எடுத்து கொள்ள உள்ளார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.