உலகம்

கட்டடத்தின் உச்சியில் நின்று அநாகரிக புகைப்படங்கள் எடுத்த தடகள வீரர் கைது..!

webteam

ஈரானில் அடுக்குமாடி கட்டடத்தின் மேல்தளத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்ட தடகள வீரர் கைது செய்யப்பட்டார்.

ஈரானின் பிரபல தடகள வீரராக இருப்பவர் அலிரெசா ஜபலகி. இவர் அண்மையில் சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் அடுக்குமாடி கட்டடத்தின் உச்சியில் நின்றபடி, ஒரு பெண்ணுடன் முத்தமிடுவதைப் போல் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் அநாகரிகாமனது என்றும், அத்துடன் இதைப் பார்த்து பலர் ஆபத்தான முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறி போலீஸார் இவரை கைது செய்துள்ளனர்.

ஈரான் நாட்டின் சட்ட விதிகளுக்கு எதிரான புகைப்படங்களை அவர் வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அந்நாட்டு நெட்டிசன்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதற்கு முன்பும் அலிரெசா இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாகவும், ஆனால் அப்போதெல்லாம் கைது நடவடிக்கை பாயவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அலிரெசாவின் தந்தை போதைப்பொருள் கடத்தல் அதிகாரி காணாமல் போனது தொடர்பாக கேள்வி எழுப்பிய பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.