உலகம்

பிரேசில் - குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

Veeramani

கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான பிரேசிலில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரேசில் அரசு அண்மையில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்தது. அதன்படி பள்ளிகள் மூலம் இந்த வயதிலுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 50 சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பெற்றோர் அனுமதியுடன் பைசர் பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.