உலகம்

உக்ரைன் ராணுவம் - பிரிவினைவாதிகள் இடையே மோதல் தீவிரம்

Veeramani

ரஷ்யாவுடனான போர் பதற்றத்திற்கு இடையே, உக்ரைனில் பிரிவினைவாதிகள் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள டன்ட்ஸ்க் மாகாணத்தில் தனி நாடு கோரி பிரிவினைவாதிகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். தற்போது ரஷ்யாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக அவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, ரஷ்யாவிற்கு அனுப்பி வைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.