உலகம்

இந்தியா டூ இலங்கை: 490 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?

kaleelrahman

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 490 கிலோ கஞ்சாவுடன்இன்று அதிகாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மண்டைதீவு பகுதி வழியாக கடத்த முயன்ற 490 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக குருநகரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு அதிகளவான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ள தோடு இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 10 கோடி ரூபாயை தாண்டும் எனவும் தெருவிக்கப்படுகிறது.