உலகம்

'மரியா' தாண்டவம்: கரீபியன் மக்கள் அச்சம்

webteam

பியூர்டோ ரிகோ மற்றும் டொமினீகன் உள்ளிட்ட கரீபியன் தீவுகள், மரியா புயலின் கோர தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளன.

கரீபியன் தீவுகளில் ஒன்றான பியூர்டோ ரிகோவை மரியா புயல் கடுமையாக தாக்‍கியது. இதனால் வீடுகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மற்றொரு தீவு நாடான டொமினிக்கன் தீவையும் தாக்‍கியது. மணிக்‍கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான வீடுகளின் கூரைகள் தூக்‍கி வீசப்பட்டன. வடக்‍கு நோக்‍கி நகர்ந்து வரும் மரியா புயலை தாக்‍குப் பிடிக்‍க முடியாமல் மக்‍கள் திணறி வருகின்றனர். மின்சாரம் துண்டிக்‍கப்பட்டதோடு, குடிநீருக்‍கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்‍கள் கடும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். இந்த புயலுக்‍கு இதுவரை 9 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.