உலகம்

ஹங்கேரி: கொரோனா தடுப்பூசி தீமில் இனிப்புகளை தயாரித்துள்ள பேக்கரி

Sinekadhara

ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசி தீமில் இனிப்புகளை தயாரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ஒரு பேக்கரி. 

கொரோனா பரவலால் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகளை போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், ஹங்கேரியில் உள்ள பேக்கரி ஒன்று தடுப்பூசி தீமில் இனிப்பு வகைகளை தயாரித்துள்ளனர். வண்ண வண்ண இனிப்பு ஜெல்லிகளை, சிரிஞ்சுக்குள் வைத்து, அதனை கேக் மீது அலங்கரித்துள்ளனர். இந்த சிரிஞ்சுகளில் இருப்பதை மக்கள் குடித்து ருசிக்கலாம்.

ஒவ்வொரு வண்ணத்தில் உள்ள சிரிஞ்சுகளுக்கும், ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளின் பெயர்களையும் வைத்துள்ளனர். இந்த தடுப்பூசியை குடித்தால் ஒரே பக்கவிளைவு, சிரிப்பு மட்டுமே என்கின்றனர் இதனைத் தயாரித்தவர்கள். வித்தியாசமான வடிவில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.