ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முகநூல்
உலகம்

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கவுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

ஏமன் தலைநகர் சனாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

PT WEB

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை தொடரவுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏமன் தலைநகர் சனாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஹவுதி அமைப்பைச் சேர்ந்த யாஹ்யா சரியா, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தொடர 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார்.

கடந்த சில மாதங்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.