உலகம்

பெரு: நிலச்சரிவில் ஒட்டுமொத்தமாக புதைந்த 50 வீடுகள்

Sinekadhara

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60 வீடுகள் புதைந்துபோயின.

பெரு நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பார்கோய் மாவட்டத்தில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 60 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும், மேலும் 80 வீடுகள் சேதமுற்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மலைப்பகுதியில் விதிகளை மீறி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளே நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.