உலகம்

ஹிஸ்புல் தலைவர் சர்வதேச பயங்கரவாதி: அமெரிக்கா அறிவிப்பு

webteam


பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது. காஷ்மீரைச் சேர்ந்த சலாவுதீன், காஷ்மீர் பிரச்னையில் அமைதியான தீர்வை எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாலும், மேலும் பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீரில் நிலவும் அசாதரண சூழலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே காரணம் என இந்தியா பல ஆண்டுகளாக கூறிவருவது தற்போது நிருபிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.