உலகம்

சீன மக்களை உறைய வைக்கும் பனிப்பொழிவு

Sinekadhara

சீனாவில் மழை போல் பனிப்பொழிவு காணப்படுவதால் அதனை உடனுக்குடன் அகற்றும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் குளிர்கால ஒலிம்பிக் மைதானத்துக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்ககூடாது என்பதற்காக அதனை உடனுக்குடன் அகற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 ஆயிரம் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். ராட்சத வாகனங்களை பயன்படுத்தியும், தண்ணீர் தெளித்தும் பனியை அகற்றுகின்றனர். தொடர் பனிப்பொழிவால் சாலைகள், வீடுகள், மரங்கள் என அந்நகரமே வெள்ளிப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.