உலகம்

செக் குடியரசு: மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட சூறைக்காற்று - 5 பேர் உயிரிழப்பு

JustinDurai

செக் குடியரசு நாட்டில் வீசிய கடுமையான சூறைக்காற்றினால் 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஏராளமான வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இதுபோன்ற சூறைக்காற்றினை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். ஹோடோனின் பகுதியை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் சூறைக்காற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் சாய்ந்து, சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.