அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகித்ததை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்திருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் 0.75 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வட்டி விகிதம் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது இப்போதுதான்.
கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8.6 சதவீதமாக இருந்தது. 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் பணவீக்கம் இவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கததை 2 சதவீதத்துக்குள் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்க்கிறது. அதனால் மேலும் வட்டி உயர்வு இருக்ககூடும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இதையும் படிங்க... FACT CHECK : ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் பெற மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகையா?
அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, பிரேசில் , கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. வட்டி விகிதம் உயர்வு என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் இவ்வளவு அதிகமாக உயர்த்தவேண்டிய நிர்ப்ந்தம் எங்களுக்கு உருவானது. கடந்த மே மாத பணவீக்க எண்கள் கட்டாயத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கா மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவுல் தெரிவித்திருக்கிறார்.
- வாசு கார்த்தி