உலகம்

தவறுகளை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் மார்க்!

தவறுகளை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் மார்க்!

webteam

கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா முறைகேடு விவகாரத்தில் தவறுகள் செய்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ள மார்க், பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு என்றும், அதை செய்ய முடியாவிட்டால் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த தவறு நடந்தது எப்படி என்பது குறித்து தாம் ஆய்வு செய்து வந்ததாகவும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் சில தவறுகள் நடந்துவிட்டிருப்பதாகவும், இவற்றை தவிர்க்க நடவடிக்கை தேவைப்படுவதாகவும் மார்க் தமது பதிவில் தெரிவித்துள்ளார். தவறுக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள மார்க், ஃபேஸ்புக் தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்காக தாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.