உலகம்

இரண்டாவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி, 3 மகள்களை கொலை செய்த நபர்!

webteam

இரண்டாவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி, 3 மகள்களை கொலை செய்துவிட்டு வீட்டையே கொளுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

எகிப்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமான மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள தயார் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்துள்ளார் கைது செய்யப்பட்டுள்ள நபர். தன் வீட்டில் இருந்த தாய், மனைவி, 3 மகள்களை கொலை செய்துள்ளார். நான்காவது மகளை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.

அதில் அவர் மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த தந்தை கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு வீட்டிற்கே தீயை வைத்துள்ளார். இடையே வீட்டிலிருந்த தப்பித்த 4 வது மகள் இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது.

இரண்டாவது திருமணத்திற்காக குடும்பத்தில் உள்ள 5 பேரை கொலை செய்துவிட்டு வீட்டிற்கே தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. தற்போது காவலில் எடுக்கப்பட்டு அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.