உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு

webteam

2018ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைகர் ஆஸ்லோவில் 2018ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. டென்னிஸ் போர்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சிகிச்சை அளித்தவர். ஈராக் நாட்டைச் சேர்ந்த குர்து மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத், சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டவர்.