உலகம்

அமெரிக்கா: உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி

Sinekadhara

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அரிய வகை உயிரினங்களை இழந்து விடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பூசி செலுத்துவதாக பூங்கா நிர்வாகிகள் கூறுகின்றனர்.