உலகம்

விரைவில் கொரோனா தடுப்பூசி : டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

sharpana

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் முதல் இந்தியாவிலும் தாக்கியது. கொரோனா தொற்று பரவி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால், இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. நாடுகள் போட்டிப்போட்டுக்கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் சீரிய முயற்சியில் இருக்கின்றன.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் 11 மருந்து நிறுவனங்களில் ஒன்றான மாடர்னா கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்று சமீபத்தில்தான் அறிவித்தது.

 இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ’கொரோனா தடுப்பூசிகள் விரைவில் வருகின்றன’ என்று தெரிவித்துள்ளதால், அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலக மக்களுக்கே கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டிருக்கிறது.