உலகம்

அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா தினசரி பாதிப்பு

Veeramani

அமெரிக்காவில் இதுவரை இல்லாத உச்சமாக தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்றைய தினம் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதியான நிலையில், ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று தொடங்கியது முதல் அமெரிக்காவில் பதிவாகும் உச்சபட்ச தினசரி பாதிப்பு இது.

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸிலும் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால் எதிர்வரும் நாட்களில் மேலும் கொரோனா பாதிப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.