உலகம்

காங்கோவில் துறைமுக ஊழியர்கள் போராட்டம்: கண்ணாடிகளை உடைத்து பொருட்களுக்கு தீ வைப்பு

Sinekadhara

கடந்த 32 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து காங்கோவில் துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைநகர் கின்ஷாசாவில் உள்ள துறைமுக அலுவலகத்தில் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.