உலகம்

‘கொரோனா எங்கிருந்து உருவானது?’ - பைடனின் உத்தரவுக்கு சீனா எதிர்ப்பு!

EllusamyKarthik

கொரோனா பெருந்தொற்று நோய் எங்கிருந்து உருவானது? என்பதை கண்டறிந்து 90 நாட்களில் தனக்கு அறிக்கை சரம்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சீனா. 

“அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட முகம் உலகறிந்த விஷயம். அமெரிக்காவின் இந்த விசாரணைக்கு பின்னால் ஒரு நோக்கம் மட்டும் உள்ளது தெளிவாக தெரிகிறது” என சீனா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் சார்பாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் உலகின் முதல் கொரோனா தொற்று என கண்டறியப்படுவதற்கு முன்னதாக கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.