உலகம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா, ஈரான், ரஷ்யா கூட்டுப்பயிற்சி

Sinekadhara

இந்தியப் பெருங்கடலின் வடக்குப்பகுதியில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யப்படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏவுகணையை தாக்கி அழிக்கும் அதிநவீன கருவி, ஹெலிகாப்டர், துப்பாக்கிகள் கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. தங்கள் தரப்பில் இருந்து மட்டும் 40 வீரர்கள் ஒத்திகையில் கலந்து கொண்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவுபகலாக போர் ஒத்திகை நடைபெற்றதாகவும், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பயிற்சி நடைபெற்றதாக சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.