உலகம்

எங்கு நடைபெறுகிறது ‘சாம்பியன்ஸ் டிராபி 2025’ கிரிக்கெட் தொடர்? - ஐசிசி அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அடுத்து வரும் முக்கியமான போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2024-ல் டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையும், 2029 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் இந்தியாவிலும் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 2031 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் நடைபெறுகிறது.