உலகம்

கனடா: ஒரே நாளில் பல இடங்களில் பொதுமக்கள் மீது கத்திகுத்து சம்பவங்கள்! 10 பேர் கொலை!

webteam

கனடாவில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் இன்று ஒரு நாளில் மட்டும் பல இடங்களில் பொதுமக்களை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்மூடித்தனமான இந்த தாக்குதல் பொதுமக்கள் மீது காரணமின்றி நடந்துள்ளது. 

இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.