உலகம்

“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்!

webteam

கஜகஸ்தானை சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானை சேர்ந்தவர் பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் மார்கோ என்ற பெண் பொம்மையுடன் கடந்த 18 மாதங்களாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டுக்கான அந்த மார்கோ என்ற பொம்மையை டொலோச்கோ திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை டொலோச்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இத்திருமணத்தில் அவரது உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.