உலகம்

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்

Veeramani

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து 120 மணி நேரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா இடைவெளியின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா.

இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தது. அத்துடன், ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையும் பெலாரஸ் எல்லை பகுதியில்தான் நடைபெற்றது.