பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி தலைநகர் பாரீஸ் வாணவேடிக்கைகளால் ஜொலித்தது.
உலகப்புகழ் பெற்ற ஈபில் கோபுரத்திற்கு அருகில் பிரெஞ்ச் தேசியக் கொடியின் வண்ணங்களில் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, பாரீஸில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் பங்கேற்ற அணிவகுப்பும் நடைபெற்றது.
இதையும் வாசிக்கலாம்: பிரான்ஸில் கவனம் ஈர்த்த 20 நாட்டு தலைவர்களின் சமையல்காரர்கள் சந்திப்பு
பிரெஞ்ச் புரட்சியின் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படும் பாஸில் சிறையை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் புகுந்து அங்குள்ள கைதிகளை விடுவித்த நாளே அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.