உலகம்

வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்

வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தானில் பரிவர்த்தனை முடக்கம்

webteam

பாகிஸ்தானில் உள்ள வங்கிகளில் வாடிகையாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலையடுத்து பண பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.

வங்கியில் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அனைத்து வங்கிகளிலிருந்தும், 8 ஆயிரம் வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. 

இதனைதொடர்ந்து பாகிஸ்தான் வங்கிகள் அனைத்தும் சர்வதேச பணப்பரிமாற்றத்துக்கு தடை செய்யபட்டுள்ளது. மேலும் மொபைல் பேங்கிங் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானில் உள்ள வங்கிகளில் பண பரிவர்த்தனைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.