உலகம்

ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடு... இந்தியர்களுக்கு பாதிப்பு

webteam

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிகம் பயன்படுத்தி வந்த 457 விசா திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்-1பி விசா மீது தடை விதிக்க நடவடிக்கை எடுத்தது போன்று, தற்போது ஆஸ்திரேலியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் 457 விசாவை பயன்படுத்தி பணியாற்றி வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 95, ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்யவே கட்டுப்பாடுகள் கொண்டு

வந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு விளக்கம் அளித்துள்ளது.