உலகம்

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது

webteam

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 26 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் நிழவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில், இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக 5 படகு ஓட்டுநர்கள் உட்பட 26 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 26 பேரையும்ட யாழ்ப்பாணம் மருதங்கேணி போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.