சீனாவின் டீப்சீக், மூன்ஷாட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ தொழில்நுட்பத்தைத் திருடிவிட்டதாகக் அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் டீப்சீக், மூன்ஷாட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ தொழில்நுட்பத்தைத் திருடிவிட்டதாகக் அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. 24,000 போலிக் கணக்குகளை உருவாக்கி, 1.6 கோடி உரையாடல்கள் மூலம் கிளாடின் திறன்களைச் சீன நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் பிரித்தெடுத்ததாக ஆந்த்ரோபிக் கூறியுள்ளது.
இதுஅமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், அந்தத் தொழில்நுட்பத்தைச் சீனா தனது ராணுவத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க், "ஆந்த்ரோபிக் நிறுவனமே மற்றவர்களின் தரவுகளைத் திருடித்தான் தனது ஏஐ-யை உருவாக்கியது" எனச் சாடியுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் ஏ.ஐ தரவு பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் எழுப்பியுள்ளது.