பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருந்து வருகிறது. அதன் காரணமாக கடந்த வாரம் விவசாய உற்பத்திக்கு 17 சதவிகிதம் பொது வரியை அமல் செய்தது அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு. அதனால் தற்போது அந்த நாட்டில் பால் விலை உயர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கராச்சி நகரில் 1 லிட்டர் பால் பாகிஸ்தான் கரன்சியில் 60 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வை இந்திய ரூபாய் மதிப்பில் வைத்து பார்த்தால் 1 லிட்டர் 86.03 ரூபாய்க்கு விற்பனையாகும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தற்போது அங்கு ஒரு லிட்டர் பால் பாகிஸ்தான் கரன்சியில் 140 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இது அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் 20 ரூபாய் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் கால்நடை விவசாய சங்கத்தின் தலைவர் ஷகீர் உமர் குஜ்ஜார் இது தொடர்பாக தங்கள் நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும். அதில் 17 சதவிகித வரியிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.