உலகம்

இணையத்தில் வைரலான ஆப்கன் குழந்தை: பெற்றோர்களிடம் ஒப்படைத்த அமெரிக்க அதிகாரிகள்

jagadeesh

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கப்பல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்தின் சுவருக்கு அப்பால் உள்ள அமெரிக்க வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. அதைப்பார்த்த பொதுமக்கள் ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உணர்ந்து அச்சமடைந்தனர். இந்நிலையில் அக்குழந்தை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க கப்பல்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.