உலகம்

இத்தாலி: காட்டுத்தீயால் புகை மண்டலமாக மாறிய நகரம்

இத்தாலி: காட்டுத்தீயால் புகை மண்டலமாக மாறிய நகரம்

PT WEB

இத்தாலியில் கடானியா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிக்கும்போது ஜூலை மாதத்தில் இங்கு தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சிசிலியின் புறநகர் பகுதியான கடானியாவில் குடியிருப்புகளை சுற்றியுள்ள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.