ஜெர்மனியில் இந்த ஆண்டு கடும் வெப்பம் காரணமாக இதுவரை சுமார் 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸைக் கடந்ததால் அதிக மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் சுமார் 4,270 பேர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். முதியவர்கள் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், ஆண்களை விடப் பெண்களே அதிகம் இறந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 2018இல் 8,400 பேரும், 2019இல் 6,900 பேரும் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர்.