உலகம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு

Veeramani

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரின் அனார்கலி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வெடிகுண்டு மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் இணைக்கப்பட்டு இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.