உலகம்

டபுள் டெக்கர் பஸ்சில் தீ விபத்து: 20 பேர் கருகி பலியான பரிதாபம்!

webteam

தாய்லாந்தில் டபுள் டெக்கர் பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் கருகி பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ளது தாக் மாகாணம். மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள இங்கிருந்து புலம் பெயர் தொழி லாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று பாங்காக் அருகிலுள்ள தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை பாங்காக் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீ பிடித்தது. பேருந்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவத் தொடங்கியது. அந்த நேரத்தில் பேருந்தில் இருந்தவர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந் தனர்.

பின்னர் தீ பிடித்ததை அறிந்து, அலறி அடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். 27 பேர் குதித்து  வெளியேறி னர். ஆனால், பின்பகுதியில் அமர்ந்திருந்த 21 பேர் தப்பிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தீயின் கோர நாக்கில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.