உலகம்

விளையாட்டால் நேர்ந்த விபரீதம்..! - சிறுமி உயிரிழப்பு

webteam

லக்னோவில் 12 வயது சிறுமி தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் துப்பாக்கி வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ தகுர்கஞ் பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது துப்பாக்கியை மேஜையின் மேல் எடுத்து வைத்துவிட்டு துணி மாற்றுவதற்காக அறைக்குள் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த நரேந்திர சிங்கின் 12 வயது மகள் ஆயுஷி மேஜையில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டுருந்தார். அப்போது துப்பாக்கி திடீரென எதிர்பாராத விதமாக வெடித்தது. 

இதில் சிறுமி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரேந்திர சிங்கிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.