ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 80ஆவது ஆண்டு விழா வரும் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சசாகி என்ற சிறுவன், நடைபயணமாக சென்று போரின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து வருகிறார்.
கடந்த கால தவறுகளை எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்துவது அவசியம் எனக் கூறும் சசாகி, போர் எவ்வளவு மோசமானது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார். உலகமெங்கும் ஆங்காங்கே போரின் துயர சுவடுகள் தென்படும் இந்த காலகட்டத்தில் இச்சிறுவனின் முயற்சி கவனத்தை ஈர்த்துள்ளது.