உலகம்

'இர்மா' பலி 50 ஆக உயர்வு

webteam

இர்மா புயலின் கோர தாண்டவத்துக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

கரீபியன் தீவுகள், கியூபா மற்றும் அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயலின் தாண்டவத்தால் மிகப் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந் நிலையில், முதியோர் விடுதியில் உயிரிழந்த முதியோர்கள் உள்பட மேலும் 16 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.