வீடியோ ஸ்டோரி

மகாராஷ்டிரா: ஓடும் ரயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்கிய பெண்

மகாராஷ்டிரா: ஓடும் ரயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்கிய பெண்

Sinekadhara

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண், தவறி விழுந்து காயமடைந்தார்.

பால்கர் பகுதியிலுள்ள வசாய் ரோடு நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், கால் தடுமாறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட பயணிகள், அப்பெண்ணை மீட்டனர். ரயில் புறப்பட்டபின் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், விதிகளை மீறுவதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.