வீடியோ ஸ்டோரி

மத்திய அரசுடன் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது: விஜய் வசந்த் பேட்டி

Veeramani

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கிடப்பில் உள்ள திட்டங்களை வேகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், "4 வழிச் சாலை திட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளன. திட்டங்களை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. காங்கிரஸ் தொகுதிகளில் பாராபட்சம் காட்டுவது அரசுக்கு அழகல்ல. நிலுவையில் உள்ள திட்டங்களை கொண்டுவர வலியுறுத்துவோம்" என்றார்.