வீடியோ ஸ்டோரி

உத்தரப்பிரதேசம்: நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்ட தாய், சேய்

Veeramani

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து கைக்குழந்தையுடன் இறங்க முற்பட்ட பெண் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து குழந்தையுடன் இறங்க முற்பட்ட பெண், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான சிறிய இடைவெளிக்குள் சிக்கிக் கொண்டார். நல்வாய்ப்பாக குழந்தையும், அப்பெண்ணும் காயங்களுடன் உயிர் தப்பினர்.