வீடியோ ஸ்டோரி

முழு ஊரடங்கு எதிரொலி - வாடகை வாகனங்கள் கிடைக்காமல் ரயில் பயணிகள் அவதி

கலிலுல்லா

முழு ஊரடங்கு காரணமாக, சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள், வாடகை வாகனங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்த ரயில் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்வதற்காக வாடகை வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் போதிய வாகனங்கள் கிடைக்காததால், ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.

மேலும் ஆட்டோ, வாடகை கார்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.