வீடியோ ஸ்டோரி

திட்டக்குடி: ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

webteam

திட்டக்குடி அருகே சபரிமலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த டெம்போ வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த டெம்போ வேன், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஐயப்ப பக்தர்கள் வந்து கொண்டிருந்த வேன், வெங்கலூர் அருகே வந்தபோது முன்பகுதியில் புகைபிடித்திருக்கிறது. இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் வேனில் இருந்து இறங்கி உயிர்தப்பினர். அடுத்த சில நொடிகளில் வேன் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து வேன் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.