வீடியோ ஸ்டோரி

திருப்போரூர்: சாலையில் கரைபுரளும் காட்டாற்று வெள்ளம் – மூழ்கிய உப்பளங்கள்

Veeramani

திருப்போரூரில் இருந்து இசிஆர் செல்லும் கைவேலி பகுதி சாலையில்  உள்ள உப்பளம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது, சாலையில் மழை நீர் ஓடுவதால் உப்பளம் முழுவதும் மழை நீரில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறது.

அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதை அந்தப் பகுதி மக்கள் செல்போனில் புகைப்படம் எடுப்பதுடன், குடும்பத்துடன் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை செய்து ஆபத்தை உணராமல் இருந்து வருகிறார்கள். அதேபோல மழைநீரில் புதிதாக நடப்பட்ட மின்கம்பங்கள், அதிகப்படியான மழைநீரில் சாய்ந்துள்ளது. இப்பகுதியில் பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட உப்பளங்கள் மற்றும் மோட்டார்களை, முழுவதும் மழைநீரில் மூழ்கிப் போயுள்ளன.