வீடியோ ஸ்டோரி

''திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளன'' - ஆளுநர் ஆர்.என்.ரவி

''திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளன'' - ஆளுநர் ஆர்.என்.ரவி

கலிலுல்லா

திருக்குறளின் முதல் குறலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதிபகவனும் ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள பரமாத்மாவும் ஒன்றுதான் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தொடங்கி வைத்தார். "கல்வெட்டில் திருக்குறள் 6" என்ற திருக்குறள் நூலினையும் அவர் வெளியிட்டார். மாநாட்டில் தலைமை உரையாற்றிய ஆளுநர், நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளதாகவும் அதனை அரசியல் காரணங்களுக்காக சுருக்க கூடாது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.