வீடியோ ஸ்டோரி

வடகிழக்கு இந்தியர்களுக்கு சிறிய கண்கள், பார்வை மிகவும் கூர்மை: நாகாலாந்து அமைச்சர்

Sinekadhara

வடகிழக்கு இந்தியர்களுக்கு சிறிய கண்கள் இருந்தாலும் பார்வை மிகவும் கூர்மையாக இருக்கும் என்று நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இன்மா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சிறிய கண்கள் குறித்து நகைச்சுவையாக பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கண்கள் சிறியதாக இருப்பதால் தூசு படாது, அதே போல் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாகஇருக்கும் எனவும் பேசியுள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவை, அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவும் பகிர்ந்துள்ளார்.